என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது
Byமாலை மலர்3 Sep 2019 3:35 AM GMT (Updated: 3 Sep 2019 3:35 AM GMT)
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்பந்தத்தின்படி தமிழகத்தில் 15 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது.
சென்னை:
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்டவை. மீதமுள்ள சுங்கச்சாவடிகள் 2008-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டவை. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்தப்படி வருடத்துக்கு ஒருமுறை சுங்கச்சாவடியில் பயனாளர் கட்டணத்தை அதிகபட்சமாக 10 சதவீதம் உயர்த்திக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், 2008-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 1992-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அடங்கின.
15 சுங்கச்சாவடிகள் விவரம் வருமாறு:-
பாளையம் (கிருஷ்ணகிரி-தோப்பூர் சாலை), நல்லூர் (சென்னை-தடா), வைகுந்தம் (சேலம்-குமாரபாளையம்), எலியார்பத்தி (மதுரை-தூத்துக்குடி), கொடைரோடு (திண்டுக்கல்-சமயநல்லூர்), மேட்டுப்பட்டி (சேலம்-உளுந்தூர்பேட்டை), மண்வாசி (திருச்சி-கரூர்), விக்கிரவாண்டி (திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை), பொன்னம்பலப்பட்டி (திருச்சி-திண்டுக்கல்), நத்தக்கரை (சேலம்-உளுந்தூர்பேட்டை), புதூர் பாண்டியபுரம் (தூத்துக்குடி-மதுரை), திருமந்ததுரை (உளுந்தூர்பேட்டை-பாடலூர்), வாழவந்தான் கோட்டை (திருச்சி-தஞ்சை), வீரசோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை), விஜயமங்கலம் (குமாரபாளையம்-செங்கம்பள்ளி).
இதன்படி 52 கி.மீ. தூரத்துக்குள் பயணிக்கும் கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை சென்றுவரை ரூ.60 கட்டணமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. இலகுரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்து ஆகியவற்றுக்கு ரூ.95 கட்டணமாகவும், லாரி-பஸ்கள் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.195 கட்டணமாகவும், கட்டுமானத்துக்கு பயன்படும் மிகப்பெரிய கனரக வாகனங்களுக்கு ரூ.305 கட்டணமாகவும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடி கட்டண விவரம் வருமாறு:- (அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணம்)
கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்கள்- ரூ.50 (ரூ.49), மினி பஸ்கள், இலகுரக வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்கள் - ரூ.90 (ரூ.84), 2 அச்சு கொண்ட லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் - ரூ.175 (ரூ.168), 3 அச்சுகள் முதல் வர்த்தகம் சார்ந்த மிகப்பெரிய கனரக வாகனங்கள் - ரூ.285 (ரூ.269).
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளும், தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த சுங்கச்சாவடிகளில் பெரும்பாலானவை 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்டவை. மீதமுள்ள சுங்கச்சாவடிகள் 2008-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டவை. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்தப்படி வருடத்துக்கு ஒருமுறை சுங்கச்சாவடியில் பயனாளர் கட்டணத்தை அதிகபட்சமாக 10 சதவீதம் உயர்த்திக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி 1992-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் மாதத்திலும், 2008-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் 1992-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் அடங்கின.
இந்தநிலையில் செப்டம்பர் மாதம் பிறந்ததை தொடர்ந்து 2008-ம் ஆண்டை சேர்ந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008-ன்படி, தமிழகத்தில் உள்ள 15 சுங்கச்சாவடிகளில் நேற்று கட்டணம் உயர்ந்துள்ளது.
15 சுங்கச்சாவடிகள் விவரம் வருமாறு:-
பாளையம் (கிருஷ்ணகிரி-தோப்பூர் சாலை), நல்லூர் (சென்னை-தடா), வைகுந்தம் (சேலம்-குமாரபாளையம்), எலியார்பத்தி (மதுரை-தூத்துக்குடி), கொடைரோடு (திண்டுக்கல்-சமயநல்லூர்), மேட்டுப்பட்டி (சேலம்-உளுந்தூர்பேட்டை), மண்வாசி (திருச்சி-கரூர்), விக்கிரவாண்டி (திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை), பொன்னம்பலப்பட்டி (திருச்சி-திண்டுக்கல்), நத்தக்கரை (சேலம்-உளுந்தூர்பேட்டை), புதூர் பாண்டியபுரம் (தூத்துக்குடி-மதுரை), திருமந்ததுரை (உளுந்தூர்பேட்டை-பாடலூர்), வாழவந்தான் கோட்டை (திருச்சி-தஞ்சை), வீரசோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை), விஜயமங்கலம் (குமாரபாளையம்-செங்கம்பள்ளி).
இதன்படி 52 கி.மீ. தூரத்துக்குள் பயணிக்கும் கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை சென்றுவரை ரூ.60 கட்டணமாக விதிக்கப்பட்டு இருக்கிறது. இலகுரக சரக்கு வாகனங்கள், சிற்றுந்து ஆகியவற்றுக்கு ரூ.95 கட்டணமாகவும், லாரி-பஸ்கள் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.195 கட்டணமாகவும், கட்டுமானத்துக்கு பயன்படும் மிகப்பெரிய கனரக வாகனங்களுக்கு ரூ.305 கட்டணமாகவும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடி கட்டண விவரம் வருமாறு:- (அடைப்புக்குறிக்குள் பழைய கட்டணம்)
கார், ஜீப், வேன் போன்ற இலகுரக வாகனங்கள்- ரூ.50 (ரூ.49), மினி பஸ்கள், இலகுரக வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்கள் - ரூ.90 (ரூ.84), 2 அச்சு கொண்ட லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் - ரூ.175 (ரூ.168), 3 அச்சுகள் முதல் வர்த்தகம் சார்ந்த மிகப்பெரிய கனரக வாகனங்கள் - ரூ.285 (ரூ.269).
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X