search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அரியாங்குப்பம் அருகே தந்தை, மகளை தாக்கி கொலை மிரட்டல்

    அரியாங்குப்பம் அருகே தந்தை மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    அரியாங்குப்பம் அருகே நோணாங்குப்பம் மெயின் ரோடு ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 50). இவர் புதுவை அரசின் வேளாண்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக கட்டுமான பொருட்கள் வீட்டின் அருகில் சாலையோரத்தில் குவித்து வைத்து இருந்தார்.

    இதற்கு அதே பகுதியை சேர்ந்த ராஜ் மற்றும் அவரது மனைவி விஜி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இது தொடர்பாக அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராஜ், அவரது மனைவி விஜி மற்றும் உறவினர் பன்னீர் ஆகிய 3 பேரும் சேர்ந்து மாசிலாமணியை கையாலும், இரும்பு சட்டியாலும் தாக்கினர். இதனை தடுக்க முயன்ற மாசிலாமணியின் மகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த மாசிலாமணி மற்றும் அவரது மகள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பின்னர் இது குறித்து மாசிலாமணி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×