என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரியாங்குப்பம் அருகே தந்தை, மகளை தாக்கி கொலை மிரட்டல்
Byமாலை மலர்31 Aug 2019 1:06 PM GMT (Updated: 31 Aug 2019 1:06 PM GMT)
அரியாங்குப்பம் அருகே தந்தை மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
அரியாங்குப்பம் அருகே நோணாங்குப்பம் மெயின் ரோடு ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 50). இவர் புதுவை அரசின் வேளாண்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக கட்டுமான பொருட்கள் வீட்டின் அருகில் சாலையோரத்தில் குவித்து வைத்து இருந்தார்.
இதற்கு அதே பகுதியை சேர்ந்த ராஜ் மற்றும் அவரது மனைவி விஜி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இது தொடர்பாக அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராஜ், அவரது மனைவி விஜி மற்றும் உறவினர் பன்னீர் ஆகிய 3 பேரும் சேர்ந்து மாசிலாமணியை கையாலும், இரும்பு சட்டியாலும் தாக்கினர். இதனை தடுக்க முயன்ற மாசிலாமணியின் மகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த மாசிலாமணி மற்றும் அவரது மகள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பின்னர் இது குறித்து மாசிலாமணி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியாங்குப்பம் அருகே நோணாங்குப்பம் மெயின் ரோடு ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 50). இவர் புதுவை அரசின் வேளாண்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக கட்டுமான பொருட்கள் வீட்டின் அருகில் சாலையோரத்தில் குவித்து வைத்து இருந்தார்.
இதற்கு அதே பகுதியை சேர்ந்த ராஜ் மற்றும் அவரது மனைவி விஜி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று இது தொடர்பாக அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராஜ், அவரது மனைவி விஜி மற்றும் உறவினர் பன்னீர் ஆகிய 3 பேரும் சேர்ந்து மாசிலாமணியை கையாலும், இரும்பு சட்டியாலும் தாக்கினர். இதனை தடுக்க முயன்ற மாசிலாமணியின் மகளையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த மாசிலாமணி மற்றும் அவரது மகள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பின்னர் இது குறித்து மாசிலாமணி அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X