search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ராஜபாளையத்தில் விபத்து- மூதாட்டி பலி

    ராஜபாளையத்தில் ஆட்டோ நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்து மூதாட்டி பலியானார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). இவர் தனது குடும்பத்தினருடன் ஆட்டோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குரசம் பாறையில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். ஆட்டோவில் கணேசன் மனைவி தனபாக்கியம் (56), இவரது தாயார் லட்சுமியம்மாள் (84), உறவினர் சொக்கத்தாய் (59) ஆகியோர் பயணித்தனர். ஆட்டோவை அம்பேத்கர் நகரை சேர்ந்த தங்கத்துரை ஓட்டினார்.

    சாமி கும்பிட்டுவிட்டு மாலையில் ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டனர். ராஜபாளையம்- முடங்கியார் ரோட்டில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அங்குள்ள என்ஜினீயிரிங் கல்லூரி அருகில் உள்ள வளைவில் திரும்பியபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்தது.

    ஆட்டோவில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் லட்சுமியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    காயமடைந்த கணேசன், தனபாக்கியம், சொக்கத்தாய் ஆகியோர் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×