search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virudhunagar accident"

    • மூலக்கரை தடுப்பு பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகவனம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சேது நாராயணபுரத்தை சேர்ந்த பிச்சை என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகவனம்(வயது56). இவரது மனைவி முல்லை கொடி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிரதாப் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.

    தற்போது அவர் சென்னையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முருகவனம் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். அவருடன் சேது நாராயணபுரத்தை சேர்ந்த பிச்சை என்பவர் பின்னால் அமர்ந்து சென்றார்.

    மூலக்கரை தடுப்பு பாலம் அருகில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் முருகவனம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முருகவனம், பிச்சை, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கூமாபட்டி இமானுவேல் கீழத்தெருவை சேர்ந்த மகேந்திரன்(30) ஆகியோர் கீழே விழுந்தனர்.

    இதில் முருகவனம் பலத்த காயமடைந்தார். உடனடியாக அந்த பகுதியினர் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்தரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகவனம் பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக வத்திராயிருப்பு போலீஸ் நிலையத்தில் பிச்சை கொடுத்த புகாரின்பேரில் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரை ஓட்டி வந்த மணிகண்டன், அவரது மனைவி, குழந்தைகள், தனம், பிச்சையம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
    • விபத்து குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    கோவை மாவட்டம் திருப்பூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது37). பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா பாரதி (32). இவர்களுக்கு விஸ்வாஸ்(8), மேகா ஸ்ரீ(6) ஆகிய குழந்தைகள் உள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் தங்கள் உறவினர்கள் தனம்(60), பிச்சையம்மாள்(80), அருண் குமார்(45) ஆகியோருடன் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் புறப்பட்டனர். நேற்று குற்றாலம் சென்றுள்ளனர்.

    இன்று அதிகாலை குற்றாலத்தில் இருந்து குலதெய்வ கோவிலுக்கு புறப்பட்டனர். மணிகண்டன் காரை ஓட்டினார். தென்காசி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரை ஓட்டி வந்த மணிகண்டன், அவரது மனைவி, குழந்தைகள், தனம், பிச்சையம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் காரில் இருந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த தனம், பிச்சையம்மாள் ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கணவன்-மனைவி, குழந்தைகளுக்கு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இந்த விபத்து குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ், காருடன் நேருக்கு நேர் மோதியது.
    • காரில் வந்த தீபிகா, புவன்யாஸ்ரீ, ராஜா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    ராஜபாளையம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மணலூர் பகுதியைச் சேர்ந்தவர் புலியூரான் (வயது 35). இவர் கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நூற்பாலையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவருக்கு தீபிகா (வயது27) என்ற மனைவியும், புவன்யாஸ்ரீ (வயது4) என்ற குழந்தையும் உள்ளனர்.

    இந்தநிலையில் புலியூரான் அவரது மகள் புவன்யாஸ்ரீக்கு மணலூரில் உள்ள குலதெய்வ கோவிலில் மொட்டை போடுவதற்காக புலியூரான், தனது சகோதரர் ராஜா மற்றும் குடும்பத்தினருடன் சொகுசு காரில் ராஜபாளையம் வழியாக சங்கரன்கோவில் அருகே மணலூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார்.

    அந்த கார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மதுரை ரோட்டில் மம்சாபுரம் விலக்கு அருகே சென்றபோது, தென்காசியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ், காருடன் நேருக்கு நேர் மோதியது. இதில் புலியூரான் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் வந்த தீபிகா, புவன்யாஸ்ரீ, ராஜா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் வன்னியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான புலியூரான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விவிபத்தில் காயமடைந்து காருக்குள் சிக்கி உயிருக்கு போராடிய தீபிகா, புவன்யாஸ்ரீ, ராஜா ஆகிய 3 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த முருகன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் முருகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பஸ்சில் வந்த 36 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

    ராஜபாளையம் அருகே விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஊரணி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • வேகத்தில் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள தவசிலிங்காபுரத்தை சேர்ந்தவர் வைரமுத்து (வயது24). இவர் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் சங்கிலிவீரன். இவரது மகன் ஸ்ரீராம் (15). இவர் முத்துகுமாரபுரத்தில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று குமாரலிங்கபுரத்தில் உள்ள முனியாண்டி கோவிலில் திருவிழா நடந்தது.

    இதில் பங்கேற்பதற்காக வைரமுத்து மோட்டார் சைக்கிளில் ஸ்ரீராமை அழைத்து சென்றார். அங்கு திருவிழா முடிந்து 2 பேரும் நேற்று இரவு 10 மணிக்கு ஊருக்கு புறப்பட்டனர். விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ஊரணி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    அதே வேகத்தில் ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வைரமுத்து, ஸ்ரீராம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து சங்கிலிவீரன் கொடுத்த புகாரின்பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அன்புநகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மாரியம்மாள்(36). நேற்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

    விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் சென்றபோது ராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த மாரியம்மாள் தவறி நடுரோட்டில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது.

    இதில் உடல் நசுங்கி மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் நாகலட்சுமி(38) படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் சிக்கியவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • சிகிச்சை பலனின்றி ஹரிபிரியா பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விருதுநகர்:

    ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுவரதன் (வயது 40). இவர்களது உறவினர் வீட்டு திருமணம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது.

    இதற்காக விஷ்ணுவரதன் தனது குடும்பத்தினருடன் சம்பவத்தன்று இரவு காரில் புறப்பட்டார். அவருடன் மனைவி பிரதீபா, குழந்தைகள் சாருண்ணிகா, சாமுத்ரிகா, உறவினர்கள் கோவர்த்தணன், சரவணராஜ், இவரது மனைவி ஹரிபிரியா (28) ஆகியோர் பயணம் செய்தனர். காரை சரவணராஜ் ஓட்டினார்.

    அதிகாலை 3 மணியளவில் விருதுநகர் மாவட்டம் மதுரை-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பட்டையன்கால் விலக்கு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர்.

    விபத்தில் சிக்கியவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிபிரியா பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து குறித்து தகவல் அறிந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.
    • காயமடைந்த மாணவ-மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். விபத்து தொடர்பாக வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள துலுக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள், 8 மாணவர்கள் என 10 பேர் இன்று காலை ஆட்டோவில் ஆவுடையாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆட்டோவை நாகராஜன் என்பவர் ஓட்டினார். ஆவுடையாபுரம் ரெயில்வே கேட் பகுதியில் ஆட்டோ சென்ற போது எதிரே வந்த பட்டாசு ஆலை வேன் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி சேதமடைந்தது.

    அதில் பயணித்த மாணவ-மாணவிகள் பாண்டீஸ்வரி (வயது 15), ராம் பிரியா (14), அபினேஷ் (11), கருப்பசாமி (11), லோகேஷ் (11), மற்றொரு கருப்பசாமி (11), ரித்திஷ் (எ) முனியாண்டி (11), அஜய் மற்றும் முருகன் மகன் கருப்பசாமி, ஆட்டோ டிரைவர் நாகராஜன் உள்பட 11 பேர் காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவ-மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவ-மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.

    அப்போது காயமடைந்த மாணவ-மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். விபத்து தொடர்பாக வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு அடையாளம் தெரியாத வாகனம் சரஸ்வதி என்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
    • படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளை நடைபெற இருப்பதால் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தலையால் நடந்தாள் குளத்தை சேர்ந்த முருகன் பூசாரி என்பவர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு இருக்கன்குடி கோவிலுக்கு பாதையாத்திரையாக வந்தனர்.

    அவர்கள் இன்று காலை சாத்தூர் அருகே தோட்டிலோவன்பட்டி அருகே நடந்து வந்தனர். அப்போது கோவில்பட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஒரு அடையாளம் தெரியாத வாகனம் சரஸ்வதி (வயது 65) என்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் பலியான சரஸ்வதி உடலை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று மதியம் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் சோலைச்சாமி (வயது 42), சந்திரசேகரன் (70). இவர்கள் 2 பேரும் இன்று மதியம் வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சாத்தூருக்கு புறப்பட்டனர்.

    சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.வெங்கடேசபுரம் பகுதியில் வந்தபோது நாகர்கோவிலில் இருந்து ஓசூர் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சோலைச்சாமி, சந்திரசேகரன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    படுகாயம் அடைந்த சோலைச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய சந்திரசேகரனை அந்த பகுதியினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

    விபத்து தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வத்திராயிருப்பு அருகே காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40). இவர் கோவை மாநகர ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த பன்னீர்செல்வம் மனைவி ராஜலட்சுமி(35), மகள் ஜெசிகா ஆகியோருடன் காரில் நேற்று தம்பிபட்டி கோட்டையூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு ஆட்டோ வந்தது.

    அந்த ஆட்டோவில் வேல்முருகன் என்பவர் குடும்பத்தினருடன் ஜவுளி எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக காரும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் போலீஸ்காரர் பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி ராஜலட்சுமி, மகள் ஜெசிகா, வேல்முருகன் அவரது மனைவி பிரியா (30) குழந்தைகள் விசுவாஸ், வைசியா மற்றும் மணிகண்டன் ஆகியோர் காயமடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் வத்திராயிருப்பு போலீசார் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    பலத்த காயமடைந்த வேல்முருகன், ராஜலட்சுமி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    வெம்பக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானதில் பட்டாசு ஆலை அதிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 47). இவர் நெல்லை மாவட்டம், வரகனூரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.

    கடந்த மாதம் இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் உடல் கருகி பலியானார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அய்யாச்சாமியை கைது செய்தனர்.

    சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அய்யாச்சாமி ஜாமீன் பெற்று சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்தார்.

    இந்த நிலையில் அய்யாச்சாமி, வெம்பக்கோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது பட்டாசு ஆலைக்கு புறப்பட்டார்.

    குகன்பாறை என்ற இடத்தில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் அய்யாச்சாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஆபத்தான நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அய்யாச்சாமி இன்று காலை பரிதாபமாக இறந்தார். வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    விருதுநகரில் இன்று அதிகாலையில் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் பேக்கரி அதிபர் மனைவியுடன் விபத்தில் பலியானார்.

    விருதுநகர், மார்ச்.21-

    பங்குனி உத்திர வழிபாட் டுக்கு சென்ற பேக்கரி அதிபர் மனைவியுடன் விபத்தில் பலியானார்.

    திருப்பூரில் பேக்கரி கடை நடத்தி வந்தவர் கோபால் யாதவ் (வயது 53). இவரது மனைவி கிருஷ்ணவேணி (48). இவர்களது மகன் சுடலைமணி (25).

    இவர்கள் பங்குனி உத்திர வழிபாட்டுக்காக குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டனர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே நடுவக்குறிச்சியில் அவர்களின் குல தெய்வமான சாஸ்தா கோவில் உள்ளது.

    விழாவில் பங்கேற்க நேற்று இரவு கோபால் உள்பட 3 பேரும், காரில் புறப்பட்டனர். காரை சுடலைமணி ஓட்டினார். இன்று அதிகாலை 1 மணியளவில் விருதுநகர் -சாத்தூர் சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

    அங்குள்ள நடுவப்பட்டி விலக்கில் கியாஸ் சிலிண்டர் லாரி நிறுத்தப்பட்டு இருந் தது. அதனை சுடலைமணி சரியாக கவனிக்கவில்லை.

    லாரியின் அருகே வந்ததும் சுதாரித்த சுடலை மணி, காரை நிறுத்த முயன்றார். அதற்கு பலன் இல்லை. வேகமாக வந்த கார் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. காருக்குள் இருந்த கோபால் அவரது மனைவி கிருஷ்ண வேணி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரை ஓட்டி வந்த சுடலைமணி படுகாயத்துடன் மீட்கப் பட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.

    விபத்து குறித்து வச்சக் காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். * * * திரிபுரா மாநிலம் அகர்தலாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். பொதுக்கூட்ட மேடையில் பெண் ஒருவர் அவரை பாராட்டி சால்வை அணிவித்தார். * * * பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விருதுநகரில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பாலிடெக்னிக் மாணவர், பெண் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகரில் இருந்து சிவகாசி வழியாக ராஜபாளையத்திற்கு தனியார் பஸ் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் இன்று காலை 8 மணிக்கு விருதுநகரில் இருந்து புறப்பட்டது.

    பஸ்சில் மாணவ- மாணவிகள் பணிக்குச் செல்வோர், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    அழகாபுரி விலக்கு பகுதியில் பஸ் சென்ற போது சாலையின் குறுக்கே ஒருவர் வந்தார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை திருப்பினர்.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் வலதுபுறம் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. பஸ்சில் இருந்தவர்கள் அய்யோ... அம்மா... என கூக்குரல் எழுப்பினர்.

    பஸ் கவிழ்ந்ததை பார்த்த அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து சென்று பஸ்சுக்கு அடியில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். பஸ் தலைகுப்புற கவிழ்ந்து கிடந்ததால் அவர்களால் வேகமாக மீட்பு பணி செய்ய முடியவில்லை.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்து அதிரடியாக பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் சிக்கிய மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் விருதுநகர், சூலக்கரையைச் சேர்ந்த குட்டியம்மாள் (வயது 60), அருப்புக்கோட்டையைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் சசிக்குமார் (20) ஆகியோர் பஸ்சின் அடியில் சிக்கி பலியாகி இருப்பது தெரியவந்தது. அவர்களது உடலை தீயணைப்பு படையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் காயம் அடைந்த 30-க்கும் மேற்பட்டோர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்தில் பள்ளிக்கூட பைகள் அதிக அளவில் கிடந்தன. இதனால் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காயமடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
    ×