என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையம் ராமநதி அணை நிரம்பியது - விவசாயிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்24 Aug 2019 8:12 AM GMT (Updated: 24 Aug 2019 8:12 AM GMT)
நெல்லை மாவட்டம் கடையம் ராமநதி அணை நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணை அமைந்துள்ளது.
மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீரை 83.5 அடி நீர்மட்டத்திலேயே நிலை நிறுத்தி, வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
தென்கால் மற்றும் வடகாலுக்கு தலா வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் 30 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் துணை ஆட்சியர் நடேசன் அணை பாதுகாப்பு ஆய்வு செய்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அம்பை தாசில்தார் வெங்கடேஷ், ராமநதி அணை உதவி பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மழை மற்றும் அணையின் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு மாறுபடும். எனவே ஆற்றின் கரையோர கிராம மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடையம் ராமநதி அணை நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணை அமைந்துள்ளது.
மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீரை 83.5 அடி நீர்மட்டத்திலேயே நிலை நிறுத்தி, வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
தென்கால் மற்றும் வடகாலுக்கு தலா வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் 30 கனஅடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் துணை ஆட்சியர் நடேசன் அணை பாதுகாப்பு ஆய்வு செய்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது அம்பை தாசில்தார் வெங்கடேஷ், ராமநதி அணை உதவி பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மழை மற்றும் அணையின் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு மாறுபடும். எனவே ஆற்றின் கரையோர கிராம மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடையம் ராமநதி அணை நிரம்பியதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X