என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ramanathi dam"
- ராமநதி அணை பகுதிக்கு செல்லும் சாலையானது மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
- ஆற்றங்கரையோரம் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக, அதன் தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், கடையம் பஸ் நிலைய பகுதியிலிருந்து ராமநதி அணை பகுதிக்கு செல்லும் சாலையானது மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இச்சாலையின் வழியே நித்திய கல்யாணி அம்மன் கோவில், பத்திரகாளியம்மன் கோவில் மற்றும் விவசாய வயல் பகுதிகளுக்கு இருசக்கர , நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே இச்சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கடையம் யூனியன் கூட்ட அரங்கு நவீன குளிரூட்டப்பட்ட வசதியுடன் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆற்றங்கரையோரம் மின் மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது ஊராட்சி தலைவர்கள் அழகுதுரை, மதியழகன், செண்பகவல்லி ஜெகநாதன், முகைதீன் பீவி, கணேசன், மலர்மதி, ஜின்னத் பிர்வின் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஆற்றுப்படுகைகள் வறண்டு காணப்படுவதால் உறை கிணறுகளில் குடிநீர் குறைந்து காணப்படுகிறது.
- இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
கடையம்:
கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் , பஞ்சாயத்து கூட்டமைப்பு சார்பாக சிற்றாறு வடிநில கோட்ட செயற்பொறியாளரிடம் நேரில் சந்தித்து மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடையம், கீழக்கடையம், கடையம் பெரும்பத்து, சேர்வை காரன்பட்டி, தெற்கு மடத்தூர் உள்பட பல பஞ்சாயத்து களுக்கு ராமநதி மற்றும் ஜம்பு நதி நீர்தேக்க உறை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. இந்த நிலையில் தற்போது கோடையால் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
ஆற்றுப்படுகைகள் வறண்டு காணப்படுவதால் உறை கிணறுகளில் குடிநீர் குறைந்து காணப்படுகிறது. எனவே இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதத்தில், ராமநதி அணையிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் இப்பகுதி பொதுமக்கள் பயன்பெறுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்