search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    தேனி அருகே விவசாயி வீட்டில் புகுந்து நகைகள் கொள்ளை

    தேனி அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் சீலயம்பட்டி மெயின்ரோடு பஞ்சாங்கம் சந்து தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது37). விவசாயி. இவர் சம்பவத்தன்று காலையில் தனது தோட்டத்திற்கு சென்று விட்டார். அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தையல் கடைக்கு சென்று விட்டார். மீண்டும் மதியம் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

    இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து பாண்டி உள்ளே சென்றார். வீட்டிற்குள் பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. இது குறித்து பாண்டி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.65 ஆயிரம் ஆகும். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×