search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறியல்
    X
    மறியல்

    மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

    மணப்பாறை அருகே இன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சாம்பட்டி ஊராட்சி ஆனம்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். குடிநீருக்காக பல கிலோ மீட்டர் நடந்தும், வாகனங்களில் சென்றும் தண்ணீர் பிடித்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக் கையும் எடுக்கவில்லை. எனவே போராட்டம் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்தனர்.

    இதனையடுத்து இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக  போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

    சம்பவ இடத்திற்கு மணப்பாறை போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மணப்பாறை நகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் மறியலை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×