search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பல்லடத்தில் குடிப்பழக்கத்தை கைவிடமுடியாததால் விரக்தி - சாயப்பட்டறை தொழிலாளி தீ குளித்து தற்கொலை

    பல்லடத்தில் குடிப்பழக்கத்தை கைவிடமுடியாத விரக்தியில் சாயப்பட்டறை தொழிலாளி தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் அருள்புரம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). சாய்ப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி மீனா (35). பனியன் தொழிலாளி. குடிப்பழக்கத்துக்கு அடிமையான பரமசிவம் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

    கடந்த 17-ந்தேதி பரமசிவம் அவரது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு வற்புறுத்தினார். குடிப்பழக்கதை மனைவி கண்டித்தார். எனினும் குடிக்க ரூ.100-ம், ரேசன் கடையில் மண்எண்ணை வாங்க ரூ.100-ம் கொடுத்தார். ரேசன் கடையில் மண்எண்ணை வாங்கிய பரமசிவம் மீதி பணத்தில் மதுக்குடித்தார்.

    வீட்டுக்கு வந்த பின்னர் குடிப்பழக்கத்தை கைவிடமுடியவில்லையே என்று வருந்தினார். இதில் விரக்தியடைந்த அவர் வாங்கி வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிசிச்சை பலனின்றி நேற்று மாலை பரமசிவம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×