என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பல்லடத்தில் குடிப்பழக்கத்தை கைவிடமுடியாததால் விரக்தி - சாயப்பட்டறை தொழிலாளி தீ குளித்து தற்கொலை
பல்லடம்:
திருப்பூர் அருள்புரம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). சாய்ப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி மீனா (35). பனியன் தொழிலாளி. குடிப்பழக்கத்துக்கு அடிமையான பரமசிவம் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
கடந்த 17-ந்தேதி பரமசிவம் அவரது மனைவியிடம் குடிக்க பணம் கேட்டு வற்புறுத்தினார். குடிப்பழக்கதை மனைவி கண்டித்தார். எனினும் குடிக்க ரூ.100-ம், ரேசன் கடையில் மண்எண்ணை வாங்க ரூ.100-ம் கொடுத்தார். ரேசன் கடையில் மண்எண்ணை வாங்கிய பரமசிவம் மீதி பணத்தில் மதுக்குடித்தார்.
வீட்டுக்கு வந்த பின்னர் குடிப்பழக்கத்தை கைவிடமுடியவில்லையே என்று வருந்தினார். இதில் விரக்தியடைந்த அவர் வாங்கி வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிசிச்சை பலனின்றி நேற்று மாலை பரமசிவம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்