என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுவாமிமலை அருகே பஸ் மோதி சிற்பி பலி
Byமாலை மலர்17 Aug 2019 11:28 AM GMT (Updated: 17 Aug 2019 11:28 AM GMT)
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே சாலையில் நடந்து சென்ற சிற்பி மீது பஸ் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை அடுத்த பாபுராஜபுரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகானந்தம் (வயது 33) சிற்பி. இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றார். அப்போது புதுச்சேரியில் இருந்து திருவையாறு நோக்கி சென்ற புதுச்சேரி பஸ் முருகானந்தம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், ஏட்டு மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டதால் பஸ்சை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை அடுத்த பாபுராஜபுரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகானந்தம் (வயது 33) சிற்பி. இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றார். அப்போது புதுச்சேரியில் இருந்து திருவையாறு நோக்கி சென்ற புதுச்சேரி பஸ் முருகானந்தம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், ஏட்டு மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டதால் பஸ்சை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X