என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்கோட்டை அருகே கார் மோதி பூ வியாபாரி பலி
Byமாலை மலர்17 Aug 2019 6:41 AM GMT (Updated: 17 Aug 2019 6:41 AM GMT)
ஊத்துக்கோட்டை அருகே கார் மோதி பூ வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் பாஞ்சாலிநகரை சேர்ந்தவர் முருகன் (வயது 57) பூ வியாபாரி.
இவர் நேற்று மாலை சூளை மேனியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டார். பின்னர் வீட்டுக்கு புறப்பட்டார்.
சூளைமேனி ஊராட்சி மன்றம் அலுவலகம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் காரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் அனுமந்தன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
விபத்தில் பலியான முருகனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X