என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜாதி வேற்றுமையை தடுக்கவே கயிறு கட்ட தடை விதிப்பு - அமைச்சர் ஜெயக்குமார்
Byமாலை மலர்16 Aug 2019 9:26 AM GMT (Updated: 16 Aug 2019 9:26 AM GMT)
ஜாதி வேற்றுமையை தடுக்கவே தமிழக அரசு மாணவர்கள் கையில் கயிறு கட்ட தடை விதித்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ராயபுரம்:
ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு விழாவில் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது மானவர்களுக்கு அவர் மழைநீர் சேகரிப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராயபுரம் ஒரு சிறிய தொகுதி தான். ஆனால் இங்கு படித்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். பல்வேறு விளையாட்டில் தங்களது திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
20 வருடமாக முப்படைகளுக்குள் போதுமான ஒற்றுமை இல்லாததால் இதனை ஒன்றிணைக்க ஒரே தலைமை ஏற்பது நல்ல விஷயம். நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவை இல்லை என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
நீட் தேர்வு மசோதாவுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தற்கான காரணத்தை விளக்கிய பின்னரே நீட் தேர்வு குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
ஜாதி வேற்றுமையை தடுக்கவே தமிழக அரசு, மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு விழாவில் மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது மானவர்களுக்கு அவர் மழைநீர் சேகரிப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராயபுரம் ஒரு சிறிய தொகுதி தான். ஆனால் இங்கு படித்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். பல்வேறு விளையாட்டில் தங்களது திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
20 வருடமாக முப்படைகளுக்குள் போதுமான ஒற்றுமை இல்லாததால் இதனை ஒன்றிணைக்க ஒரே தலைமை ஏற்பது நல்ல விஷயம். நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவை இல்லை என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
2010-ல் தி.மு.க., காங்கிரஸ் நீட் தேர்வை கொண்டு வர எடுத்த முயற்சியால் தான் இந்த பிரச்சினை தற்போது ஏற்பட்டுள்ளது. பொய் சொல்லி வாழ்ந்தவன் இல்லை. மெய் சொல்லும் நாங்கள் கெட்டுப்போவதும் இல்லை.
நீட் தேர்வு மசோதாவுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்தற்கான காரணத்தை விளக்கிய பின்னரே நீட் தேர்வு குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
ஜாதி வேற்றுமையை தடுக்கவே தமிழக அரசு, மாணவர்கள் கையில் கயிறு கட்டக்கூடாது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X