search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 50 இடங்களில் போலீசார் பாதுகாப்பு

    இந்திய சுதந்திர தின விழா நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. தனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் 50 இடங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவாரூர்:

    இந்திய சுதந்திர தின விழா நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் முதல் காவலர்கள் வரையிலான 500 பேர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட 30 இடங்களிலும், முக்கிய தளவாடங்கள் அமைந்துள்ள 20 இடங்களிலும் பிக்கெட்டிங், ரோந்து அமைத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட எல்லைகளில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தொடர் வாகன தணிக்கையில் காவல் துறையினர் ஈடுபடுகின்றனர். மேலும் உட்கோட்ட வாரியாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படையினர் லாட்ஜ், திருமண மண்டபம், சினிமா தியேட்டர் ஆகியவற்றை தணிக்கை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாரூர் தியாகராஜர் கோவில், ஆலங்குடி குருபகவான் கோவில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹா போன்ற முக்கிய வழிபாட்டு தலங்கள் மற்றும் திருவாரூர், பேரளம், நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய முக்கிய ரெயில் நிலையங்கள் ஆகியவற்றில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் குழுவினர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×