என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்12 Aug 2019 9:59 AM GMT (Updated: 12 Aug 2019 9:59 AM GMT)
அன்னூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னூர்:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் கோபாலன். இவரது மகன் ராம்குமார் (30). அதே ஊரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் மோகன்ராஜ் (26). இருவரும் கூலிதொழிலாளர்கள்.
இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று அன்னூரில் இருந்து கரியாக் கவுண்டனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோகன்ராஜ் பைக்கை ஓட்டிச் சென்றார். மோட்டார் சைக்கிள் ராம்நகர் அருகே சென்றபோது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த ராம்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோகன்ராஜ் காயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த மோகன்ராஜை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அன்னூர் போலீசார் சரக்கு ஆட்டோ டிரைவரான ராம் நகரைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் கோபாலன். இவரது மகன் ராம்குமார் (30). அதே ஊரைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் மோகன்ராஜ் (26). இருவரும் கூலிதொழிலாளர்கள்.
இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று அன்னூரில் இருந்து கரியாக் கவுண்டனூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோகன்ராஜ் பைக்கை ஓட்டிச் சென்றார். மோட்டார் சைக்கிள் ராம்நகர் அருகே சென்றபோது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த ராம்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோகன்ராஜ் காயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னூர் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த மோகன்ராஜை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அன்னூர் போலீசார் சரக்கு ஆட்டோ டிரைவரான ராம் நகரைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X