என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருபுவனை அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலி
Byமாலை மலர்11 Aug 2019 3:37 PM GMT (Updated: 11 Aug 2019 3:37 PM GMT)
திருபுவனை அருகே நடந்து சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வில்லியனுர்:
திருபுவனை அருகே உள்ள சன்னியாசிகுப்பத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (வயது65). இவர் மதகடிப்பட்டில் உள்ள தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்று இருந்தார்.
சம்பவத்தன்று டீகுடிப்பதற்காக மெயின்ரோடு அருகே சென்ற போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மண்ணாங்கட்டி மீது மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கொண்டாபாலாஜிராவ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் இறந்த மண்ணாங்கட்டிக்கு தனம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X