search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் கடத்தல்
    X
    மணல் கடத்தல்

    அம்மாபேட்டை அருகே மணல் கடத்திய 2 வேன் பறிமுதல்

    அம்மாபேட்டை அருகே மணல் கடத்திய 2 வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

    அம்மாபேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை காவல் சரகத்திற்குட்பட்ட உடையார் கோவில் பகுதியில் அம்மாபேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதி சிவன் கோவில் அருகே வந்துகொண்டிருந்த இரண்டு மினிலோடு வேன்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தும்படி கூறினர். அதில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதனை தொடர்ந்து வேனை சோதனையிட்ட போலீசார் வேனில் அரசு அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 வேன்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×