என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவொற்றியூரில் ஆட்டோவை திருடி விற்ற 2 பேர் கைது
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் எழுத்துக் காரன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்,ஆட்டோ டிரைவர். இவர் கடந்த மாதம் 21-ந் தேதி தன்னுடைய ஆட்டோவை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்தார்.
மறுநாள் காலையில் பார்த்த போது ஆட்டோவை காணவில்லை. மர்ம நபர்கள் ஆட்டோவை திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து ராஜேந்திரன் திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி. டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு வாலிபர் ஆட்டோவை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. இதனை வைத்து ஆட்டோவை திருடியது சைதாப்பேட்டை பாரதிதாசன் குறுக்கு தெருவை சேர்ந்த முருகன் என்று போலீசார் பிடித்தனர். இவரது மாமியார் வீடு திருவொற்றியூர் எழுத்துக் காரன் தெருவில் உள்ளது. கடந்த 21-ந் தேதி மாமியார் வீட்டுக்கு வந்த முருகன் நள்ளிரவில் ஆட்டோ நிற்பதை பார்த்து அதை திருடிச் சென்றுள்ளார்.
பின்னர் சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்த கூட்டாளி ராஜி என்பவர் உதவியுடன் ஆட்டோவை தனித்தனியாக பிரித்து புதுப்பேட்டையில் விற்பனை செய்து இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து முருகன், ராஜி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்