என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தப்பளாம்பூலியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்8 Aug 2019 5:24 PM GMT (Updated: 8 Aug 2019 5:24 PM GMT)
ரேஷன் கடை வினியோக குளறுபடிகளை சரிசெய்யக்கோரி தப்பளாம்புலியூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்:
அண்மை காலமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. பொருட்கள் வாங்க மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். மண்எண்ணெய் உரிய அளவு வழங்கப்படுவதில்லை. அனைத்து பொருட்களும் அனைவருக்கும் கிடைக்கப்படுவதில்லை. தமிழக அரசின் இந்த போக்கை கண்டித்தும், ரேஷன் கடை வினியோக குளறுபடிகளை சரிசெய்யக்கோரியும் திருவாரூரில் ஒன்றியத்தில் ரேஷன் கடைகள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று தப்பளாம்புலியூர், காரியாங்குடி ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சேகர், மாதர் சங்க நிர்வாகிகள் செல்வி, சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல புதுப்பத்தூரில் கிளை செயலாளர் அமிர்தலிங்கம், மாங்குடி வடகரையில் கிளை செயலாளர் முருகையன், துரைக்குடியில் கிளை செயலாளர் ராஜேந்திரன், புதூரில் கிளை செயலாளர்கள் பக்கிரிசாமி, கணேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சாமியப்பன், ஒன்றிய செயலாளர் இடும்பையன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சுர்ஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அண்மை காலமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. பொருட்கள் வாங்க மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். மண்எண்ணெய் உரிய அளவு வழங்கப்படுவதில்லை. அனைத்து பொருட்களும் அனைவருக்கும் கிடைக்கப்படுவதில்லை. தமிழக அரசின் இந்த போக்கை கண்டித்தும், ரேஷன் கடை வினியோக குளறுபடிகளை சரிசெய்யக்கோரியும் திருவாரூரில் ஒன்றியத்தில் ரேஷன் கடைகள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று தப்பளாம்புலியூர், காரியாங்குடி ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் சேகர், மாதர் சங்க நிர்வாகிகள் செல்வி, சரோஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல புதுப்பத்தூரில் கிளை செயலாளர் அமிர்தலிங்கம், மாங்குடி வடகரையில் கிளை செயலாளர் முருகையன், துரைக்குடியில் கிளை செயலாளர் ராஜேந்திரன், புதூரில் கிளை செயலாளர்கள் பக்கிரிசாமி, கணேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சாமியப்பன், ஒன்றிய செயலாளர் இடும்பையன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சுர்ஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X