search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை திருட்டு
    X
    நகை திருட்டு

    திருமங்கலம் அருகே பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகை மோசடி

    திருமங்கலம் அருகே பாலீஷ் போடுவதாக கூறி பெண்ணிடம் 3 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ்சரகத்திற்கு உட்பட்ட ஈச்சம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணி. இவருக்கும் சங்கீதா (வயது 19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று மதியம் சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது 40 வயது மதிக்கத்தக்க 2 மர்ம ஆசாமிகள் அங்கு வந்தனர். அவர்கள் சங்கீதாவிடம் பழைய நகையை பாலீஷ்போட்டு புதிய நகை போல் செய்து தருவதாக கூறினர்.

    இதை நம்பிய சங்கீதா உடனே தன்னுடைய 3 பவுன் நகையை மர்ம நபர்களிடம் பாலீஷ்போடுவதற்காக கொடுத்தார். சிறிது நேரத்தில் சங்கீதாவிடம் குக்கர் கேட்ட மர்ம நபர்கள் பின்னர் அதில் நகையை போட்டு விட்டதாகவும், 15 நிமிடம் கழித்து எடுக்குமாறு கூறினர். இதற்கு கூலியாக மர்ம நபர்கள் சங்கீதாவிடம் 1000 ரூபாய் பெற்று கொண்டு சென்றனர்.

    மர்ம நபர்கள் கூறியபடி சங்கீதா குக்கரை திறந்து பார்த்தபோது அதில் நகை இல்லை. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சங்கீதா மர்ம நபர்கள் தன்னை ஏமாற்றி நகையை திருடிச் சென்றதை உணர்ந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
    Next Story
    ×