என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவிலில் கோவில் அர்ச்சகர் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்8 Aug 2019 9:56 AM GMT (Updated: 8 Aug 2019 9:56 AM GMT)
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் கோவில் அர்ச்சகர் வீட்டில் 9 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி(வயது42). கோவில் அர்ச்சகர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து தனது உறவினர்களுடன் அத்திவரதரை தரிசிப்பதற்காக காஞ்சிபுரத்திற்கு காரில் சென்றார். நேற்று மாலை காஞ்சிபுரம் சென்றடைந்தபோது அய்யாசாமிக்கு அவரது வீட்டின் அருகே உள்ளவர்கள் போன் செய்தனர். அப்போது உங்கள் வீடு திறந்து கிடக்கிறது என்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அங்கிருந்து திரும்பி வெள்ளகோவிலுக்கு வந்தார். அப்போது வீட்டின் காம்பவுண்ட் கேட் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த செயின், மோதிரம் உள்பட 9 பவுன் நகை காணாமல் போய் இருந்தது. அய்யாசாமி ஊருக்கு சென்றதை நோட்டமிட்ட நபர்கள் வீட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து அய்யாசாமி வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி(வயது42). கோவில் அர்ச்சகர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து தனது உறவினர்களுடன் அத்திவரதரை தரிசிப்பதற்காக காஞ்சிபுரத்திற்கு காரில் சென்றார். நேற்று மாலை காஞ்சிபுரம் சென்றடைந்தபோது அய்யாசாமிக்கு அவரது வீட்டின் அருகே உள்ளவர்கள் போன் செய்தனர். அப்போது உங்கள் வீடு திறந்து கிடக்கிறது என்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அங்கிருந்து திரும்பி வெள்ளகோவிலுக்கு வந்தார். அப்போது வீட்டின் காம்பவுண்ட் கேட் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த செயின், மோதிரம் உள்பட 9 பவுன் நகை காணாமல் போய் இருந்தது. அய்யாசாமி ஊருக்கு சென்றதை நோட்டமிட்ட நபர்கள் வீட்டை உடைத்து திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து அய்யாசாமி வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X