என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடிதம் எழுதி வைத்து விட்டு தாயுடன் மாயமான என்ஜினீயரிங் பட்டதாரி பெண்
Byமாலை மலர்6 Aug 2019 11:40 AM GMT (Updated: 6 Aug 2019 11:40 AM GMT)
புதுவை அருகே கடிதம் எழுதி வைத்து விட்டு தாயுடன் மாயமான என்ஜினீயரிங் பட்டதாரி பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை சொக்கநாதன் பேட்டை ராமலிங்கம் நகர் காமராஜர் வீதியை சேர்ந்தவர் பாபு (வயது 52). விவசாயி. இவரது மனைவி தென்னரசி (47). இவர்களது மகள் பவித்ரா (21). பி.டெக்சிவில் என்ஜினீயரிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
பவித்ரா வெளியூருக்கு சென்று வேலை செய்ய விரும்பினார். ஆனால், அதனை பாபு ஒப்புக்கொள்ளவில்லை. புதுவையிலேயே வேலை தேடிக்கொள்ளுமாறு பவித்ராவிடம் அறிவுறுத்தினார். ஆனாலும், வெளியூருக்கு வேலைக்கு செல்வதில் பவித்ரா பிடிவாதமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற பவித்ரா மற்றும் அவரது தாய் தென்னரசி மீண்டும் வீடு திரும்பவில்லை.
அப்போது வீட்டில் பவித்ரா எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் தாயுடன் வேலை தேடி வெளியூர் செல்வதாக பவித்ரா குறிப்பிட்டு இருந்தார்.
பல நாட்களாக மகள் மற்றும் மனைவியை பற்றி எந்தவித தகவலும் தெரியாததால் பாபு இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தாயுடன் மாயமான என்ஜினீயரிங் பட்டதாரி பெண்ணை தேடி வருகிறார்கள்.
புதுவை சொக்கநாதன் பேட்டை ராமலிங்கம் நகர் காமராஜர் வீதியை சேர்ந்தவர் பாபு (வயது 52). விவசாயி. இவரது மனைவி தென்னரசி (47). இவர்களது மகள் பவித்ரா (21). பி.டெக்சிவில் என்ஜினீயரிங் படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
பவித்ரா வெளியூருக்கு சென்று வேலை செய்ய விரும்பினார். ஆனால், அதனை பாபு ஒப்புக்கொள்ளவில்லை. புதுவையிலேயே வேலை தேடிக்கொள்ளுமாறு பவித்ராவிடம் அறிவுறுத்தினார். ஆனாலும், வெளியூருக்கு வேலைக்கு செல்வதில் பவித்ரா பிடிவாதமாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற பவித்ரா மற்றும் அவரது தாய் தென்னரசி மீண்டும் வீடு திரும்பவில்லை.
அப்போது வீட்டில் பவித்ரா எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் தாயுடன் வேலை தேடி வெளியூர் செல்வதாக பவித்ரா குறிப்பிட்டு இருந்தார்.
பல நாட்களாக மகள் மற்றும் மனைவியை பற்றி எந்தவித தகவலும் தெரியாததால் பாபு இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தாயுடன் மாயமான என்ஜினீயரிங் பட்டதாரி பெண்ணை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X