என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டி.கல்லுப்பட்டியில் அரசு ஊழியர் வீட்டில் நகை கொள்ளை
பேரையூர்:
மதுரை மாவட்டம், டி.கல் லுப்பட்டியில் உள்ள மேலத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 59). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஊழியராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும் பத்தினருடன் மன்னார் குடியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 11¼ பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.
வீட்டு கதவு திறக்கப்பட்டு கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர் நகைகள் திருட்டு போயி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ராஜேந்திரன், டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை திருடிய ஆசாமிகளை தேடி வருகின் றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்