என் மலர்

    நீங்கள் தேடியது "home jewelry"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தொண்டாமுத்தூர் அருகே பட்டபகலில் காவலாளி வீட்டில் நகை-பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குபேரபுரியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் இரவு வீட்டுக்கு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ஆறுச்சாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 8 பவுன் தங்க நகைகள், ரூ. 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து ஆறுச்சாமி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.இதனை வைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.பட்டபகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வீடு புகுந்து நகை- பணத்தை திருடிய மர்ம நபர்கள் செக் மூலம் ரூ.50 ஆயிரத்தை எடுத்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை:

    மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது51). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் கையெழுத்திடப்பட்ட செக் புத்தகத்தையும் திருடிக் கொண்டு தப்பினர்.

    வெளியூரில் இருந்து வீடு திரும்பிய சுப்பிரமணியன் நகை-பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் கொள்ளையர்கள் எடுத்து சென்ற செக் மூலம் ரூ.50 ஆயிரத்தை வங்கியில் இருந்து எடுத்திருப்பது சுப்பிரமணியனுக்கு தெரிய வந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நாகையாபுரம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள நாகையாபுரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வாழவந்தான்புரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் மலைச்சாமி (வயது 34).

    இவர் வீட்டில் தந்தை, தங்கை, அவரது கணவர் பெரியசாமி ஆகியோருடன் இரவில் படுத்து உறங்கினார். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தனர்.

    இதனை பயன்படுத்தி யாரோ மர்ம மனிதன் வீட்டுக்குள் புகுந்து மலைச்சாமியின் தங்கை கழுத்தில் கிடந்த  தங்கச்சங்கிலியை பறித்தான்.

    இதனால் திடுக்கிட்டு கண் விழித்த அவர் திருடன்... திருடன்.... என கூச்சலிட்டார். இதனை கேட்டு எழுந்த மலைச்சாமி மற்றும் குடும்பத்தினர், நகை பறித்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவன் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டான்.

    இது குறித்து நாகையாபுரம் போலீசில் மலைச்சாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிச் சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கள்ளிக்குடி அருகே வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன். இவரது மனைவி கலைச்செல்வி.

    சம்பவத்தன்று இவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பீரோவை திறந்து அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ,1000-த்தை திருடிக் கொண்டு தப்பினார்.

    இது குறித்து கலைச் செல்வி கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கலைச் செல்வி வீட்டில் நகை, பணம் திருடியது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சண்முகக்கண்ணன் (வயது 27) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

    ×