என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளூர் வரத்து குறைந்தது - பொள்ளாச்சியில் இருந்து ஒட்டன்சத்திரம் வந்த பூசணிக்காய்
Byமாலை மலர்5 Aug 2019 9:39 AM GMT (Updated: 5 Aug 2019 9:39 AM GMT)
உள்ளூர் வரத்து குறைந்ததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு பொள்ளாச்சியில் இருந்து பூசணிக்காய் வந்து இறங்கியது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை, மார்க்கம்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், அரசபிள்ளைபட்டி, விருப்பாச்சி, மூலசத்திரம் உள்ளிட்ட பல கிராமங்களில் பூசணிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மழை முற்றிலும் ஏமாற்றியதால் காய்கறி சாகுபடி செய்ய முடியவில்லை. இதனால் பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து அர்ஜூணா பூசணி, மஞ்சள் நிற பூசணி ஆகியவை 5 டன் அளவில் வந்து இறங்கியது.
ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. உள்ளூர் வரத்து அதிகமாக இருந்தபோது ஒரு கிலோ ரூ.2-க்கு விற்றது. அப்போது பூசணிக்காயை வாங்க ஆள் இல்லாததால் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது முற்றிலும் உள்ளூர் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. மழை ஏமாற்றி வருவதால் பூசணி மட்டுமின்றி பெரும்பாலான காய்கறிகள் விளைச்சல் குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை, மார்க்கம்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், அரசபிள்ளைபட்டி, விருப்பாச்சி, மூலசத்திரம் உள்ளிட்ட பல கிராமங்களில் பூசணிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மழை முற்றிலும் ஏமாற்றியதால் காய்கறி சாகுபடி செய்ய முடியவில்லை. இதனால் பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து அர்ஜூணா பூசணி, மஞ்சள் நிற பூசணி ஆகியவை 5 டன் அளவில் வந்து இறங்கியது.
ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. உள்ளூர் வரத்து அதிகமாக இருந்தபோது ஒரு கிலோ ரூ.2-க்கு விற்றது. அப்போது பூசணிக்காயை வாங்க ஆள் இல்லாததால் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது முற்றிலும் உள்ளூர் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. மழை ஏமாற்றி வருவதால் பூசணி மட்டுமின்றி பெரும்பாலான காய்கறிகள் விளைச்சல் குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X