என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் அருகே 11-ம் வகுப்பு மாணவருக்கு கத்திரிக்கோல் குத்து- சக மாணவன் கைது
Byமாலை மலர்31 July 2019 10:38 AM GMT (Updated: 31 July 2019 10:38 AM GMT)
திருவாரூர் அருகே பிளஸ் 1 மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவனை கத்திரிக்கோலால் குத்திய சக மாணவனை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே ஆண்டிபாளையம் புதுத்தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மகன் அப்துல் பைசல் (வயது 16). இவர் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனிடையே பள்ளியில் மாலை 5.30மணி அளவில் பிளஸ்-1 மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது பாலியாபுரத்தைச் சேர்ந்த செல்வேந்திரன் என்ற மாணவன், அப்துல் பைசலை கத்திரிக்கோலால் உடலில் 9 இடங்களில் குத்தியுள்ளான். இதில் காயம் அடைந்த அப்துல் பைசல் கூச்சல் போட்டான்.
அப்போது பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து காயம் அடைந்த அப்துல் பைசலை மீட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கத்திரிக்கோலால் குத்திய சக மாணவன் செல்வேந்திரனை திருவாரூர் தாலுக்கா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் அருகே ஆண்டிபாளையம் புதுத்தெருவை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மகன் அப்துல் பைசல் (வயது 16). இவர் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனிடையே பள்ளியில் மாலை 5.30மணி அளவில் பிளஸ்-1 மாணவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது பாலியாபுரத்தைச் சேர்ந்த செல்வேந்திரன் என்ற மாணவன், அப்துல் பைசலை கத்திரிக்கோலால் உடலில் 9 இடங்களில் குத்தியுள்ளான். இதில் காயம் அடைந்த அப்துல் பைசல் கூச்சல் போட்டான்.
அப்போது பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்து காயம் அடைந்த அப்துல் பைசலை மீட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கத்திரிக்கோலால் குத்திய சக மாணவன் செல்வேந்திரனை திருவாரூர் தாலுக்கா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X