search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோதல்
    X
    மோதல்

    ஆண்டிப்பட்டி அருகே கோஷ்டி மோதலில் அரிவாள் வெட்டு

    ஆண்டிப்பட்டி அருகே கோஷ்டி மோதலில் ஏற்பட்ட தகராறில் பலருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.

    தேனி:

    ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு தங்கம்மாள்புரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது52). சம்பவத்தன்று இவர் தனது தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இவரது அண்ணன் தங்கமுத்து மற்றும் அவரது மகன்கள் தர்மர், தங்கப்பிள்ளை ஆகியோர் சொத்தை தங்களது பெயருக்கு எழுதித்தரக்கோரி தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் கோஷ்டியாக மோதிக்கொண்டனர்.

    இதில் செல்வம் படுகாயமடைந்தார். இதேபோல் இருகுடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.

    இதுகுறித்து செல்வம் மற்றும் தர்மர் ஆகியோர் தனித்தனியாக கடமலைக்குண்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் செல்வம், சேகர், பரமேஸ்வரி, பவித்ரா, தங்கமுத்து, தர்மர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×