என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பெண் மர்ம மரணம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இன்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதை பார்த்த பயணிகள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் பையில் வைத்திருந்த சில ஆவணங்களை வைத்து விசாரித்தனர்.
அதில் அவரது பெயர் மாரியம்மாள் (வயது 65) என தெரிய வந்தது. இவரது மகன் மதுரையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது மகனை பார்த்து விட்டு திண்டுக்கல் பஸ் நிலையம் வந்தபோது இறந்து கிடந்தார். இவருக்கு ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பஸ் நிலையத்தில் வந்து இறங்கியதும் இறந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உடலை ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்