என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடபழனி பணிமனையில் 2 பேர் பலியானதற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் கைது
Byமாலை மலர்28 July 2019 8:22 AM GMT (Updated: 28 July 2019 8:22 AM GMT)
வடபழனி போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதி சுவர் இடிந்த விபத்தில் 2 பேர் பலியானதற்கு காரணமான ஓட்டுனர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார்.
சென்னை:
சென்னை வடபழனியில் உள்ள போக்குவரத்து பணிமனை பேருந்துகளில் நேற்று நள்ளிரவு பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பணிமனையில் உள்ள தொழிலாளர்கள் தங்கிய அறையின் சுவர் மீதி மோதியது. இந்த விபத்தில் பணிமனை ஊழியர்கள் 2 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்து கழக இணை நிர்வாக இயக்குனர் இளங்கோ ஆகியோர் விபத்து நடந்த பணிமனையில் ஆய்வு செய்தனர். அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், சென்னை வடபழனி பணிமனை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு கூடுதல் நிதி பெற்று தர முதல் அமைச்சரிடம் பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், வடபழனி போக்குவரத்து பணிமனையில் பேருந்து மோதி சுவர் இடிந்த விபத்தில் 2 பேர் பலியானதற்கு காரணமான ஓட்டுனர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். பணியில் கவனக்குறைவாக இருந்து மரணம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X