search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    விஷம் குடித்து பள்ளி மாணவன் தற்கொலை

    விஷம் குடித்து 9ம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தர்மபுரி:

    சேலம் மாவட்டம் வீரியன்தண்டா பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் யுவராஜ் (வயது14). முத்தம்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் யுவராஜ் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சரிவர படிப்பு வராத காரணத்தினால் யுவராஜ் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்ல வில்லை. இந்த நிலையில் மோரூர் பகுதியில் உள்ள பள்ளியில் படிப்பதாக சிறுவன் தனது தந்தையிடம் தெரிவித்தான். 

    வேறுபள்ளியில் சேர்ப்பதற்காக யுவராஜ் படிக்கும் பள்ளியில் சென்று அவரது தந்தை மாற்று சான்றிதழை கேட்டுள்ளார். அதற்கு நாளை (26-ந் தேதி) வந்து மாற்று சான்றிதழை வாங்கி கொள்ளுங்கள் என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் யுவராஜ் நேற்று மாலை பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நள்ளிரவு 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி யுவராஜ் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×