என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
21 பேரை கடித்து குதறிய தெரு நாய் - ஆஸ்பத்திரியில் சிகிச்சை
Byமாலை மலர்22 July 2019 10:26 AM GMT (Updated: 22 July 2019 10:26 AM GMT)
நெட்டப்பாக்கம் அருகே 21 பேரை தெரு நாய் கடித்து குதறியது. அவர்கள் நெட்டப்பாக்கம் மற்றும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கம், குச்சிபாளையம் பகுதிகளில் தெருநாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் அப்பகுதியில் நடந்து செல்வோரையும், 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களையும் தெருநாய்கள் விரட்டுவதால் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் ஒரு தெரு நாய் 4 ஆடுகளை கடித்து குதறியது. மேலும் அந்த வழியாக நடந்து சென்ற எம். குச்சிபாளையம், மொளப்பாக்கம், சூரமங்கலம் காலனி, நெட்டப்பாக்கம், பகுதிகளை சேர்ந்த நீலா (வயது45), தேவராசு (71), ஜெயா (40), சுப்பிரமணி (50), ஆர்த்தி (26), பானுமதி உள்ளிட்ட 21 பேரை நாய் விரட்டி விரட்டி கடித்தது. அவர்கள் நெட்டப்பாக்கம் மற்றும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கம், குச்சிபாளையம் பகுதிகளில் தெருநாய்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் அப்பகுதியில் நடந்து செல்வோரையும், 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களையும் தெருநாய்கள் விரட்டுவதால் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் ஒரு தெரு நாய் 4 ஆடுகளை கடித்து குதறியது. மேலும் அந்த வழியாக நடந்து சென்ற எம். குச்சிபாளையம், மொளப்பாக்கம், சூரமங்கலம் காலனி, நெட்டப்பாக்கம், பகுதிகளை சேர்ந்த நீலா (வயது45), தேவராசு (71), ஜெயா (40), சுப்பிரமணி (50), ஆர்த்தி (26), பானுமதி உள்ளிட்ட 21 பேரை நாய் விரட்டி விரட்டி கடித்தது. அவர்கள் நெட்டப்பாக்கம் மற்றும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X