search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரி சிகிச்சை"

    திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராணிக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. #Swineflu
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வீடுகள், வணிக நிறுவனங்களில் டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் பணிகளை நேரடியாக மேற்கொண்டு வருகிறார்.

    இதில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருக்கும் வீடுஜ கடைகள்- வணிக வளாகங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 139 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருவாரூரை சேர்ந்த செல்வராணி (வயது42) என்ற பெண்ணுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    இதையடுத்து அவருக்கு சிறப்பு வார்ட்டில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரை டெங்கு என அனுமதிக்கப்பட்ட 26-க்கும் மேற்பட்டவர் களுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது ஒரு பெண்ணுக்கு மட்டும் பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

    இவ்வாறு கலெக்டர் கூறினார். #Swineflu

    திருத்துறைப்பூண்டி அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர்கள் 3 பேர் ‘ஆசிட்’ குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு சாலை தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவருடைய மகள் உமா(வயது 20). இவர் கட்டிமேட்டில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவர் வேலை முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அதே தெருவை சேர்ந்த முருகையன் மகன் வெற்றிவேலுக்கும்(25), உமாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரையும் அக்கம், பக்கத்தினர் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு உமா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வெற்றிவேல் மற்றும் அவருடைய நண்பர்களான சுந்தரபாண்டி(22), கோகுல்(22) ஆகியோர் உமாவின் உறவினரான வடபாதியை சேர்ந்த கண்ணனிடம் பேசிக்கொண்டிருந்தனர்.

    இதைப்பார்த்த உமா, வெற்றிவேல் உள்ளிட்ட 3 பேரிடமும், எனது உறவினரிடம் என்ன பேசினீர்கள்? என கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது வெற்றிவேல், சுந்தரபாண்டி, கோகுல் ஆகிய 3 பேரும் சேர்ந்து உமாவை தாக்கினர்.

    இதில் காயமடைந்த உமா திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து உமா அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேல், சுந்தரபாண்டி, கோகுல் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர்.

    போலீசார் தங்களை தேடுவதை அறிந்த வெற்றிவேல் உள்பட 3 பேரும் போலீசாரின் விசாரணைக்கு பயந்து கழிவறையை சுத்தம் செய்யும் ‘ஆசிட்’டை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    இதில் உயிருக்கு போராடிய அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர்கள் 3 பேர் ‘ஆசிட்’ குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பத்தூரில் 2 மாத குழந்தைக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்ததையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் கூலித்தொழிலாளி இவரது மனைவி லாவண்யா.

    இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு லாவண்யாவுக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக 2 மாத குழந்தை மயங்கிய நிலையிலும், அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டும் அவதிப்பட்டு வந்தது. இதனால், பெற்றோர் குழந்தையை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை டாக்டர் செந்தில்குமார் பரிசோதித்தார்.

    அப்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை உடனடியாக வார்டில் அனுமதித்து சுவாச கருவிகள் பொருத்தினர். பின்னர், குழந்தைக்கு இன்சுலின் செலுத்தி படிப்படியாக சர்க்கரையின் அளவை குறைத்தனர்.

    பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை, நிமோனியா, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் தாக்கும். ஆனால், இந்த குழந்தைக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 787 ஆக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். பின்னர் குழந்தைக்கு இன்சுலின் செலுத்தி படிப்படியாக சர்க்கரையின் அளவு 300 ஆக குறைக்கப்பட்டது.

    தற்போது குழந்தையின் சர்க்கரை அளவை குறைத்து அதன் உயிரை காப்பாற்றியுள்ளோம்.

    கருவுற்றிருக்கும் போது உடல் உறுப்புகளில் பாதிப்பு இருக்கிறதா? என்றுதான் நாங்கள் கண்டறிய முடியும். ஆனால், இந்த குழந்தையின் கணையம் செயல்பாட்டினை கண்டறியவில்லை. இப்போது அதற்கும் வசதி வாய்ப்புகள் வந்திருக்கிறது.

    கருவில் இருக்கும் போதே குழந்தையின் உடல் நலனை தெரிந்து கொள்ள முடியும். இக்குழந்தையின் பிரச்சனைக்கு ஜீன் பிரச்சனையாக இருக்கலாம். வம்சா வழியாக இதுபோன்ற நோய்கள் வர வாய்ப்புகள் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குழந்தையின் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். தற்போது குழந்தைக்கு வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    ×