என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி மக்களின் முன்னேற்றத்துக்கு உழைத்தவர் - ஷீலா தீட்சித் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம்
Byமாலை மலர்20 July 2019 3:33 PM GMT (Updated: 20 July 2019 3:37 PM GMT)
மாரடைப்பால் இன்று மரணம் அடைந்த டெல்லி முன்னாள் முதல் மந்திரியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான ஷீலா தீட்சித் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
மத்திய முன்னாள் மந்திரியும், டெல்லி முன்னாள் முதல் மந்திரியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான ஷீலா தீட்சித் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'பாராளுமன்ற மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் போட்டியிட்டு வென்ற ஷீலா தீட்சித், முன்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரியாகவும், பிரதமர் அலுவலகத்துக்கான இணை மந்திரியாகவும் சிறப்பாக செயலாற்றியவர்.
டெல்லி மக்களை முன்னேற்றுவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய அவர் கேரள மாநில கவர்னராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
ஷீலா தீட்சித் மறைவு செய்தியை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். அவரது மறைவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய முன்னாள் மந்திரியும், டெல்லி முன்னாள் முதல் மந்திரியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான ஷீலா தீட்சித் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'பாராளுமன்ற மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசம் மாநிலத்தில் போட்டியிட்டு வென்ற ஷீலா தீட்சித், முன்னர் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரியாகவும், பிரதமர் அலுவலகத்துக்கான இணை மந்திரியாகவும் சிறப்பாக செயலாற்றியவர்.
காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அவர், மூன்று முறை டெல்லி முதல் மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். டெல்லி முதல் மந்திரியாக பதவி வகித்த காலத்தில் தனது நிர்வாகத் திறனால் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.
ஷீலா தீட்சித் மறைவு செய்தியை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளேன். அவரது மறைவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X