search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மோட்டார் சைக்கிள் -மொபட் மோதல்: ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் பலி

    கொழிஞ்சாம்பாறையில் மோட்டார் சைக்கிள் -மொபட் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    கோவை நரசிம்ம நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (64) ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராமகிருஷ்ணன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து கொழிஞ்சாம்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×