என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழவரம் அருகே இலவச லேப்-டாப் கேட்டு மாணவர்கள் மறியல்
Byமாலை மலர்18 July 2019 8:39 AM GMT (Updated: 18 July 2019 8:39 AM GMT)
சோழவரம் அருகே இலவச லேப்-டாப் வழங்கக்கோரி சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்குன்றம்:
பாடியநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 13-ந்தேதி நடந்த நிகழ்ச்சியின்போது 15 அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்களை அமைச்சர் வழங்கினார்.
அப்போது 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளில் படித்த மாணவ- மாணவிகளுக்கு லேப்-டாப் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் அலமாதி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் லேப்டாப் வழங்கக்கோரி திடீரென பள்ளி முன் செங்குன்றம்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியின் கண்ணாடியை கல்வீசி உடைத்தனர்.
தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
பாடியநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 13-ந்தேதி நடந்த நிகழ்ச்சியின்போது 15 அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்களை அமைச்சர் வழங்கினார்.
அப்போது 2016-17 மற்றும் 2017-18 ஆண்டுகளில் படித்த மாணவ- மாணவிகளுக்கு லேப்-டாப் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் அலமாதி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் லேப்டாப் வழங்கக்கோரி திடீரென பள்ளி முன் செங்குன்றம்- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியின் கண்ணாடியை கல்வீசி உடைத்தனர்.
தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X