search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை தாக்குதல்
    X
    யானை தாக்குதல்

    கீழ்கோத்தகிரி அருகே யானை தாக்கி தொழிலாளி பலி

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே உள்ள கண்டிபட்டியை சேர்ந்தவர் பாலன் (60) விவசாய கூலித் தொழிலாளி. இவர் நேற்று தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.

    இன்று காலை அந்த வழியாக சென்ற ஆதிவாசிகள் தொழிலாளி பாலன் தோட்டத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை யானை தாக்கி கொன்றது தெரிய வந்தது.

    இது குறித்து சோலூர் மட்டம் போலீசுக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று யானை தாக்கி பலியான பாலன் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×