search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    துத்திப்பட்டு தொழிற்பேட்டை பகுதியில் வீச்சரிவாளுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது

    துத்திப்பட்டு தொழிற்பேட்டை பகுதியில் வீச்சரிவாளுடன் சுற்றி திரிந்த ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டை அடுத்த துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது உத்திரவாகினிபேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி பாம்ரவி என்பவர் படுகாயம் அடைந்தார். மேலும் குண்டு தயாரித்து வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே போலீசார் சரிவர ரோந்து பணிகள் மேற்கொள்ளாததால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தற்போது தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு சேதராப்பட்டு போலீசார் துத்திப்பட்டு தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வாலிபர் ஒரு வீச்சரிவாளை பதுக்கி வைத்திருந்தார்.

    வீச்சரிவாளை பறிமுதல் செய்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கிருமாம்பாக்கம் காலனி இந்திரா நகரை சேர்ந்த புகழ் என்ற புகழேந்தி (வயது23) என்பதும் பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கும், கொலை முயற்சி வழக்கும் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து குற்றம் செய்யும் நோக்கில் வீச்சரிவாளுடன் திரிந்த புகழேந்தியை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×