என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![பச்சிளம் குழந்தை பச்சிளம் குழந்தை](https://img.maalaimalar.com/Articles/2019/Jul/201907151137120881_Tiruvannamalai-near-Baby-range_SECVPF.gif)
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பச்சிளங் குழந்தை வீச்சு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை புதிய அலுவலகம் கட்டிட பணி நடந்து வருகிறது. இதன் அருகே உள்ள புதர் பகுதியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை வீசி சென்றுள்ளனர்.
புதரில் கிடந்த குழந்தை அழுது கொண்டிருந்தது. கட்டிட வேலைக்கு வந்த பெண்கள் சத்தம் கேட்டு ஓடி சென்றனர்.
குழந்தையை பார்த்த அவர்கள் திடுக்கிட்டனர். குழந்தையின் உடலில் இருந்த தாயின் ரத்தம் கூட காயாமல் இருந்தது. கட்டிட தொழிலாளர்கள் குழந்தையை வாரி எடுத்து அதன்மீது படிந்திருந்த ரத்தம், தூசி ஆகியவற்றை சுத்தம் செய்தனர்.
இதுபற்றி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் குழந்தையை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாய் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அங்குள்ள கேமராக்களில் குழந்தை வீசி சென்றது பதிவாகி உள்ளதா? எனவும் பார்வையிட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)