என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருகே சரக்கு வேன்-கார் மோதல் - புரோகிதர் பலி
Byமாலை மலர்10 July 2019 6:03 PM GMT (Updated: 10 July 2019 6:03 PM GMT)
திருவண்ணாமலை அருகே சரக்கு வேன் கார் மீது மோதிய விபத்தில் புரோகிதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பே கோபுரம் மெயின் ரோடு ஓம் சக்தி இல்லம் பகுதியை சேர்ந்தவர் திபுசண்முகம், புரோகிதர். இவரது மனைவி சுஜாதா. இவர்களுடைய மகன் சந்திரமவுனேஸ்வரன் (2). திபுசண்முகம் குடும்பத்துடன் காஞ்சீபுரம் அத்திவரதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய காரில் சென்றனர்.
போளூர் ரோடு திடீர் குப்பம் அருகில் செல்லும் போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு வேன் திடீரென கார் மீது மோதியது. இதில் திபுசண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் வந்த சுஜாதா, சந்திரமவுனேஸ்வரன் மற்றும் சரக்கு வேனில் வந்த வேலூர் கஸ்பாவை சேர்ந்த ஜலில்கான் (33), வேலூர் தொரப்பாடியை சேர்ந்த டிரைவர் சிவா (29) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை பே கோபுரம் மெயின் ரோடு ஓம் சக்தி இல்லம் பகுதியை சேர்ந்தவர் திபுசண்முகம், புரோகிதர். இவரது மனைவி சுஜாதா. இவர்களுடைய மகன் சந்திரமவுனேஸ்வரன் (2). திபுசண்முகம் குடும்பத்துடன் காஞ்சீபுரம் அத்திவரதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய காரில் சென்றனர்.
போளூர் ரோடு திடீர் குப்பம் அருகில் செல்லும் போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த சரக்கு வேன் திடீரென கார் மீது மோதியது. இதில் திபுசண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் வந்த சுஜாதா, சந்திரமவுனேஸ்வரன் மற்றும் சரக்கு வேனில் வந்த வேலூர் கஸ்பாவை சேர்ந்த ஜலில்கான் (33), வேலூர் தொரப்பாடியை சேர்ந்த டிரைவர் சிவா (29) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X