search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    கண்ணமங்கலம் அருகே பட்டப்பகலில் 2 வீடுகளில் கொள்ளை

    கண்ணமங்கலம் அருகே பட்டப்பகலில் 2 வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள அர்ஜூனாபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் கன்னியப்பன்(40). தற்போது சென்னையில் லாரி டிரைவர். பணி செய்து வாரம் ஒரு முறை வீட்டுக்கு வந்து செல்வார்.

    இவரது மனைவி கீதா (34) தனது மகன் நவீன்ராஜூக்கு கல்வி உதவித் தொகை பெற வங்கி கணக்கு ஆரம்பிக்க நேற்று காலை படவேட்டில் வங்கிக்கு சென்று பகல் சுமார் 2 மணி அளவில் வீடு திரும்பினார்.

    அப்போது அவரது வீட்டில் பின் பக்கக் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5½ சவரன் நகைகள், சேமிப்பு பணம் ரூ 30ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

    மக்கள் நடமாடும் நேரத்தில் பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் பொதுமக்களிடம் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டுள்ளது.

    இதே ஊரில் கடந்த 2-ந் தேதி முன்னாள் ராணுவ வீரர் கோவிந்தராஜ் என்பவர் வீட்டில் பட்டப்பகலில் புகுந்து 25 சவரன் நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ 40ஆயிரம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    மீண்டும் இதே ஊரில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

    இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் படவேடு கோட்டைமலைரோடு பகுதியில் வசிக்கும் அண்ணாதுரை(65) என்பவரின் வீட்டில் யாருமில்லாதபோது,நேற்று பின்பக்க கதவை உடைத்து 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுவிட்டனர்.

    இது குறித்து சந்தவாசல் போலீசில் அண்ணாதுரை புகார் செய்துள்ளார். படவேடு அர்ஜூனாபுரம் இரு ஊர்களும் அருகருகே உள்ளது. பகல் நேரத்தில் கொள்ளை சம்பவம் பொதுமக்களிடம் பீதியும், அச்சமும் ஏற்பட்டு வருகிறது.

    எனவே திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×