என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமனம்- டிஜிபியாக திரிபாதி நியமனம்
Byமாலை மலர்29 Jun 2019 5:59 AM GMT (Updated: 29 Jun 2019 5:59 AM GMT)
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகமும், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் நாளையுடன் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து அந்த பதவிகளுக்கு புதிய அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.
நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக அரசின் 46-வது தலைமை செயலாளர் ஆவார். இதேபோல் சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த திரிபாதி சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான திரிபாதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, காவல் ஆணையர், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி, தென் மண்டல ஐஜி, சிபிசிஐடி ஐஜி உள்ளிட்ட உயர் பொறுப்புகளை வகித்தவர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் நாளையுடன் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து அந்த பதவிகளுக்கு புதிய அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.
நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக அரசின் 46-வது தலைமை செயலாளர் ஆவார். இதேபோல் சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த திரிபாதி சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1985 ஆண்டில் நேரடியாக தேர்வாக ஐஏஎஸ் அதிகாரி ஆன சண்முகம், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2010-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 9 வருடங்களாக அந்த பொறுப்பில் இருந்த நிலையில், தற்போது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான திரிபாதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, காவல் ஆணையர், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி, தென் மண்டல ஐஜி, சிபிசிஐடி ஐஜி உள்ளிட்ட உயர் பொறுப்புகளை வகித்தவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X