என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொல்லிமலை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்24 Jun 2019 11:43 AM GMT (Updated: 24 Jun 2019 11:43 AM GMT)
கொல்லிமலை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம சேந்தமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட அரங்கசிவன் குன்று, விநாயகர் கோவில் தெரு, சுப்பிரமணிய தெரு பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1 மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை.
இதனால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
இது குறித்து அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலக்தில் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் காளப்ப நாயக்கன்பட்டி -கொல்லிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதன் பேரில் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் சிரமப்பட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம சேந்தமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட அரங்கசிவன் குன்று, விநாயகர் கோவில் தெரு, சுப்பிரமணிய தெரு பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1 மாதமாக முறையாக குடிநீர் வழங்கவில்லை.
இதனால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
இது குறித்து அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலக்தில் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் காளப்ப நாயக்கன்பட்டி -கொல்லிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சேந்தமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதன் பேரில் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் சிரமப்பட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X