என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தென்தாமரை குளம் அருகே ரெயில் முன் பாய்ந்து எலக்ட்ரீசியன் தற்கொலை
தென்தாமரை குளம்:
சாமிதோப்பு செட்டி விளை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது 2-வது மகன் கோகுலகண்ணன். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். கோகுல கண்ணனுக்கு இன்னும் திருமண மாகவில்லை. இவர் தொழில் தொடர்பாக பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தார். அதனை திருப்பி கொடுக்க முடியவில்லை.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் கோகுல கண்ணன் மனம் உடைந்து காணப்பட்டார். யாருடனும் பேசாமல் இருந்தார். கோகுல கண்ணன் நேற்றிரவு வீட்டில் தூங்க சென்றார். இன்று அதிகாலை அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை.
இதனால் உறவினர்கள் அவரை தேடி சென்ற போது வீட்டின் அருகே இருந்த ரெயில் தண்டவாளத்தில் கோகுல கண்ணன் தலை சிதைந்து இறந்து கிடந்தார். அவர் அந்த வழியாக சென்ற ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இது பற்றி அப்பகுதி மக்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேலும் கோகுல கண்ணன் தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்