என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி
Byமாலை மலர்24 Jun 2019 10:02 AM GMT (Updated: 24 Jun 2019 10:02 AM GMT)
கோவை அருகே தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் மேலாளராக உள்ளார். இவர் கணபதி பகுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மாலை வங்கியை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் சுந்தர்ராஜ் என்பவர் வந்து வங்கியை திறந்தார். அப்போது உள்ளே சென்று பார்த்தபோது வங்கியில் உள்ள ஸ்டோர் ரூமின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருந்தது.
மர்ம நபர்கள் யாரோ கம்பியை உடைத்து உள்ளே நுழைந்து வங்கியில் உள்ள ஹார்டு டிஸ்க்கை திருடி சென்றது தெரியவந்தது. ஆனால் வங்கியில் இருந்து பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள முத்துக்கவுண்டன் புதூரில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நெல்லை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் மேலாளராக உள்ளார். இவர் கணபதி பகுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி மாலை வங்கியை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரியும் சுந்தர்ராஜ் என்பவர் வந்து வங்கியை திறந்தார். அப்போது உள்ளே சென்று பார்த்தபோது வங்கியில் உள்ள ஸ்டோர் ரூமின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருந்தது.
மர்ம நபர்கள் யாரோ கம்பியை உடைத்து உள்ளே நுழைந்து வங்கியில் உள்ள ஹார்டு டிஸ்க்கை திருடி சென்றது தெரியவந்தது. ஆனால் வங்கியில் இருந்து பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X