என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஷம் குடித்த மனைவி பலி: கணவர் உயிருக்கு போராட்டம் - உருக்கமான கடிதம் சிக்கியது
Byமாலை மலர்22 Jun 2019 11:10 AM GMT (Updated: 22 Jun 2019 11:10 AM GMT)
கோவை அருகே உடல் நலக்குறைவு காரணமாக சானி பவுடர் குடித்த நிலையில் மனைவி பலியானார். கணவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை:
கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையம் வேதாத்திரி மகரிஷி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). நகைப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி (38). இவர் காந்திபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இதற்காக சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் உடல் நிலை நலம்பெறவில்லை. இதனால் 2 பேரும் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.
இதன்காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த 2 பேரும் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் சாணிப்பவுடரை கரைத்து குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கினர்.
நீண்ட நேரமாக இவர்களின் வீட்டுக்குகதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது ஆனந்தி படுக்கை அறையில் இறந்த நிலையில் கிடந்தார். செந்தில்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.
உடனடியாக செந்தில்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த தகவல் கிடைத்ததும் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது 2 பேரும் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தோம். இதற்காக சிகிச்சை பெற்றும் உடல்நலம் பெறவில்லை. இதன் காரணமாக நாங்கள் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தனர்.
இவ்வாறு அதில் எழுதி இருந்தனர்.
பின்னர் போலீசார் ஆனந்தியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையம் வேதாத்திரி மகரிஷி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 43). நகைப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி (38). இவர் காந்திபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தனர். இதற்காக சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் உடல் நிலை நலம்பெறவில்லை. இதனால் 2 பேரும் மிகுந்த மனவேதனை அடைந்தனர்.
இதன்காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த 2 பேரும் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் சாணிப்பவுடரை கரைத்து குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கினர்.
நீண்ட நேரமாக இவர்களின் வீட்டுக்குகதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது ஆனந்தி படுக்கை அறையில் இறந்த நிலையில் கிடந்தார். செந்தில்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார்.
உடனடியாக செந்தில்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த தகவல் கிடைத்ததும் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது 2 பேரும் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அதில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தோம். இதற்காக சிகிச்சை பெற்றும் உடல்நலம் பெறவில்லை. இதன் காரணமாக நாங்கள் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ளுங்கள் என்று எழுதியிருந்தனர்.
இவ்வாறு அதில் எழுதி இருந்தனர்.
பின்னர் போலீசார் ஆனந்தியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X