search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கம் அருகே டிராக்டரில் மணல் கடத்திய வாலிபர் கைது
    X

    செங்கம் அருகே டிராக்டரில் மணல் கடத்திய வாலிபர் கைது

    செங்கம் அருகே டிராக்டரில் மணல் கடத்தியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
    செங்கம்:

    செங்கம் அடுத்த செய்யாறு ஆற்றில் தொடர்ந்து மணல் கடத்தியதாக ஆற்றை ஒட்டியுள்ள பெரிய மங்கலம், அம்மனூர் மக்கள் டி.எஸ்.பி. குத்தாலிங்கத்திடம் புகார் செய்தனர். அதில் ஆற்றை ஒட்டிய பகுதியில் வசித்தாலும் போர்வெல்லில் தண்ணீர் வற்றிவிட்டது.

    தொடர்ந்து ஆற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் 500 அடிக்கு போர்வெல் போட்டாலும் தண்ணீர் வரவில்லை.

    செய்யாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டுமென கூறியிருந்தனர்.

    இதையடுத்து நேற்று மாலை செங்கம் போலீசார் அம்மனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்தவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் மணல் கடத்தி வந்த நபர் அம்மனூரை சேர்ந்த சிவக்குமார் (23) என தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமாரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×