என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கம் அருகே டிராக்டரில் மணல் கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்21 Jun 2019 11:51 AM GMT (Updated: 21 Jun 2019 11:51 AM GMT)
செங்கம் அருகே டிராக்டரில் மணல் கடத்தியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்கம்:
செங்கம் அடுத்த செய்யாறு ஆற்றில் தொடர்ந்து மணல் கடத்தியதாக ஆற்றை ஒட்டியுள்ள பெரிய மங்கலம், அம்மனூர் மக்கள் டி.எஸ்.பி. குத்தாலிங்கத்திடம் புகார் செய்தனர். அதில் ஆற்றை ஒட்டிய பகுதியில் வசித்தாலும் போர்வெல்லில் தண்ணீர் வற்றிவிட்டது.
தொடர்ந்து ஆற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் 500 அடிக்கு போர்வெல் போட்டாலும் தண்ணீர் வரவில்லை.
செய்யாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டுமென கூறியிருந்தனர்.
இதையடுத்து நேற்று மாலை செங்கம் போலீசார் அம்மனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்தவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் மணல் கடத்தி வந்த நபர் அம்மனூரை சேர்ந்த சிவக்குமார் (23) என தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமாரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
செங்கம் அடுத்த செய்யாறு ஆற்றில் தொடர்ந்து மணல் கடத்தியதாக ஆற்றை ஒட்டியுள்ள பெரிய மங்கலம், அம்மனூர் மக்கள் டி.எஸ்.பி. குத்தாலிங்கத்திடம் புகார் செய்தனர். அதில் ஆற்றை ஒட்டிய பகுதியில் வசித்தாலும் போர்வெல்லில் தண்ணீர் வற்றிவிட்டது.
தொடர்ந்து ஆற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால் 500 அடிக்கு போர்வெல் போட்டாலும் தண்ணீர் வரவில்லை.
செய்யாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டுமென கூறியிருந்தனர்.
இதையடுத்து நேற்று மாலை செங்கம் போலீசார் அம்மனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்தவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் மணல் கடத்தி வந்த நபர் அம்மனூரை சேர்ந்த சிவக்குமார் (23) என தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமாரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X