என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே ஐ.டி.ஐ. மாணவியை கடத்தி சென்ற வாலிபர்
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி தெற்கு காலனியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ரம்யா (வயது 19). கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார். முருகன் கடந்த சில வருடங்களாக குடும்பத்துடன் கோவையிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரம்யா விடுமுறைக்காக சின்னமனூரில் உள்ள தனது தாத்தா ராஜேந்திரன் வீட்டுக்கு வந்திருந்தார்.
சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து ராஜேந்திரன் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கோவையைச் சேர்ந்த பிரசாத் என்பவர்தான் தனது பேத்தியை கடத்தி சென்றிருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் கடத்தப்பட்ட மாணவியையும் அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்