search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
    X

    மேட்டுப்பாளையம் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

    மேட்டுப்பாளையம் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கவுண்டம்பாளையம்:

    மேட்டுப்பாளையம் பகுதியில் 13 வயது மாணவி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் அனிஷ்குமார் (22). வெல்டிங் பட்டறை தொழிலாளி.

    இந்நிலையில் மாணவி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட அந்த வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி கூச்சலிட்டு கொண்டு வெளியில் ஓடிவந்தார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து தனது பாட்டியிடம் தெரிவித்தார். ஆனால் அவர் வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×