என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோகத்தூரில் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
Byமாலை மலர்20 Jun 2019 3:23 PM GMT (Updated: 20 Jun 2019 3:23 PM GMT)
சோகத்தூரில் முனியப்பன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் முனியப்பன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் ஒரு உண்டியல் உள்ளது. இன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அந்த கொள்ளையனை பொதுமக்கள் விரட்டி சென்றனர். அப்போது ஒரு வீட்டின் கேட்டில் ஏறிய போது கொள்ளையன் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் பிடிப்பட்ட கொள்ளையனை சரமாரியாக தாக்கினர்.
இது குறித்து பொதுமக்கள் தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் கோவில் உண்டியலை திருடிய கொள்ளையனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை கைது செய்தனர்.
கொள்ளையனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X