search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple collection box"

    நெல்லித்தோப்பில் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு வேல் முருகன் நகர் 2-வது குறுக்கு தெருவில் சாலை முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து உண்டியல் காணிக்கை பணம் செலுத்துவது வழக்கம்.

    நேற்று சங்கடகர சதுர்த்தியையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனத்துக்கு பின்னர் கோவில் அர்ச்சகர் ராஜி இரவு 10 மணிக்கு கோவிலை பூட்டி சென்றார். இன்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் பூஜை செய்ய அர்ச்சகர் ராஜி கோவிலுக்கு வந்தார்.

    அப்போது கோவிலின் 2 கதவு பூட்டுகளும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. காணிக்கை பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    கடந்த 6 மாதமாக உண்டியல் திறக்கப்படவில்லை. எனவே, உண்டியலில் சுமார் ரூ.60 ஆயிரம் வரை காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறனும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அருகில் உள்ள வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து உண்டியல் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போத்தனூரில் செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர்.

    கோவை:

    கோவையை அடுத்த போத்தனூர் கணேசபுரத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு கொள்ளையர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் கோவில் பூட்டு, உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

    உண்டியலில் சுமார் ரூ.20 ஆயிரம் வரை இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சிவகிரி:

    ராயகிரி - வாசுதேவ நல்லூர் இடையே கூடநல்லூர் மலையின் மீது பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. கோவிலின் முன் பகுதியில் ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் உண்டியலின் பணம் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் நேற்று கோவிலை திறப்பதற்காக அர்ச்சகர் வந்தார். அப்போது கோவில் முன்புள்ள உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கோவில் நிர்வாக அலுவலர் தங்கபாண்டியனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் இது குறுத்து வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கோவிலின் வெளிப்புறம் உள்ள சி.சி.டி.வி. காமிரா மற்றும் அவசர கால ஒலி எழுப்பும் அலாரம் ஆகியவைகளும் உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை. எனினும் சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் உண்டியலில் இருந்து நிர்வாகம் சார்பாக பணம் எடுக்காததால் அதிக அளவில் பணம் இருக்கும் என தெரிகிறது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    விருத்தாசலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெரிய வடவாடி உள்ளது. இங்கு நடுகாட்டு அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாமிதரிசனம் செய்வதுவழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் காணிக்கை பணத்தை உண்டியலில் செலுத்தினர்.

    இந்த கோவிலில் பூசாரிகளாக முத்து, குமார் ஆகியோர் இருந்து வந்தனர். நேற்று இரவு பூஜை முடிந்ததும் இருவரும் கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் கோவிலின் சுற்றுசுவரை ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். 
    அவர்கள் கோவிலின் முன்பு இருந்த 5 அடி உயரம் உள்ள இரும்பு உண்டியலை வெல்டிங் மிஷன்மூலம் துளைபோட்டனர். பின்னர் அதில் இருந்த பணத்தை ஒரு பையில் மூட்டையாக கட்டிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இன்று காலை பூசாரி குமார் வழக்கம்போல் கோவிலுக்கு வந்தார். கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

    இதுகுறித்து அவர் மங்கலம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உண்டியலில் இருந்த ரூ.2 லட்சம் காணிக்கை பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கோவிலின் முன்பு மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.

    விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுனர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தடயங்களை பதிவு செய்தனர். உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே இந்த கோவிலில் 3 முறை உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
    கறம்பக்குடி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கடுக்காகாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இந்த கோவிலில் உள்ள மாடகாளி உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு அடிக்கடி பக்தர்கள் கிடாவெட்டு பூஜைகள் நடத்துவது வழக்கம். மேலும் நேர்த்திக்கடனாக கோவில் உண்டியலில் பக்தர்கள் பணம், தங்க நகைகளையும் காணிக்கையாக செலுத்துவதும் உண்டு. இந்தநிலையில் நேற்று முன்தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    பின்னர் இரவு வழக்கம்போல கோவில் பூசாரி கோவிலை அடைத்து விட்டு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்போது கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கும், வடகாடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலை பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “கடந்த ஒரு ஆண்டாக உண்டியல் திறக்கப்படாததால் பக்தர்கள் செலுத்திய பணத்தின் மதிப்பு பல ஆயிரக் கணக்கில் இருக்கும். மேலும் சென்ற ஆண்டும் கும்பாபிஷேகத்தின்போது கோவிலில் இருந்த மற்றொரு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. கோவிலுக்கு செலுத்தும் காணிக்கை தொடர்ந்து திருட்டுபோவது வேதனை அளிக்கிறது” என தெரிவித்தனர். 
    ×