என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி அருகே கூலித்தொழிலாளி மனைவி தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்19 Jun 2019 3:20 PM GMT (Updated: 19 Jun 2019 3:20 PM GMT)
தர்மபுரி அருகே குடும்ப தகராறில் தகூலித்தொழிலாளி மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள ஏ.ஜெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. கூலித்தொழிலாளியான இவர் தனியார் கம்பெனியில் கிரானைட் கற்களை இறக்கி வைப்பதற்காக கோவைக்கு சென்று விட்டார். இவருக்கு திருமணமாகி கோகிலா (வயது25) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்று கோகிலாவுக்கும், அவரது மாமியாருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோகிலா வீட்டில் தனியாக இருந்த போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் உடனே தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோகிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 5 வருடங்கள் ஆனநிலையில் கோகிலாவு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X